×

தா.பேட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு 3ம்தேதி மருத்துவ முகாம்

தா.பேட்டை, அக்.30:  தா.பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த  பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தா.பேட்டை வட்டார வளமையத்தின் சார்பில்  மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 3.11.2018 அன்று காலை  10 மணிமுதல் 1 மணிவரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. 18  வயது வரைஉள்ள மாற்றுத்தின் கொண்ட மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
இதில் கண்பார்வை குறைவு, காதுகேளாமை, அறிவுத்திறன் குறைபாடு, பேச்சுத்திறன்  குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.  முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு  நகல், பிறப்பு சான்றிதழ், 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அசல்  சான்றுகளையும் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags : 3rd Medical Clinic for Students ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்...