×

நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் வலியுறுத்தல் விவசாயி தவற விட்ட ரூ.50 ஆயிரம் மீட்பு:

திருத்துறைப்பூண்டி. அக்.30: நாகை மாவட்டம் கள்ளிமேடு தாமரைப்புலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகப்பன் ( 53). இவர் நேற்று ஊரிலிருந்து திருமணத்திற்கு  ஜவுளி எடுப்பதற்காக காரில் திருத்துறைப்பூண்டிக்கு  ரூ.50 ஆயிரத்துடன் வந்துள்ளார். நாகப்பன் திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகில் நேற்றுமதியம் டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது  பணம்  தவறிகீழே விழுந்துவிட்டது.சிறிது நேரத்தில் பணம் தவறியது தெரியவந்து டீக்கடையில் கேட்டபோது டீக்கடைகாரரும் ஏதோ ஒரு பெண் ஒரு கீழே குனிந்து எதையோ எடுத்து சென்றார் என்று தெரிவித்தார்.நாகப்பன் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். எஸ்.ஐ.வல்லவராணி, ஏட்டுக்கள் செல்குமார், தனபாக்கியம் ஆகியோர் டீக்கடையில் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது கழுவமுள்ளிஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஒரு பெண் பணப்பையைஎடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாகவிரைந்து சென்றுஅந்த பெண் வீட்டுக்குள் சென்றபொழுது கண்காணிப்பு கேமராவில் பதிவானஅடையாளத்தை வைத்து பார்த்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை மீட்டு விவசாயிடம் வழங்கினார்கள். துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக்கொடுத்த எஸ்.ஐமற்றும் ஏட்டுக்களுக்கு டி.எஸ்.பிசந்திரசேகர் பாராட்டு தெரிவித்தார்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு