×

நீடாமங்கலம் அருகே கப்பிகள் பெயர்ந்து மோசமான சித்தாம்பூர்- வேட்டைதிடல் சாலை

நீடாமங்கலம்,அக்.30: நீடாமங்கலம் அருகில் சித்தாம்பூர்-வேட்டைதிடல் இடையில் கப்பிகள் பெயர்ந்து மோசமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ,வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தாம்பூர் பாலத்திலிருந்து மன்னார்குடியிலிருந்து வேட்டைதிடல் செல்லும் சாலையில் இணையும் தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கப்பிகள் பெயர்ந்து மோசமாக உள்ளது. இந்த சாலையில் கூத்தாநல்லூர்,திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சித்தாம்பூர்,

வேட்டைதிடல், அரிச்சபுரம், தேவங்குடி,உடையார் மான்யர்,உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த சாலையில் தான் சென்று வருகின்றனர். அதே போன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்று மாலை நேரத்தில் வீடு திரும்பும் போது கீழே விழுந்து ரத்த காயங்களுடன் செல்கின்றனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து மோசமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : hunt ,Nedumangalam ,
× RELATED கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு...