×

ஒருமாதமாக குடிநீர் விநியோகம் இல்லை ஒரு குடம் தண்ணீரை ₹7க்கு வாங்க முடியல

நாமக்கல், அக்.30: வீசானம் கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனால் ஒரு குடம் தண்ணீர் ₹7க்கு வாங்க முடியவில்லை என குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வீசானத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கலெக்டர் ஆசியாமரியதிடம் மனு அளித்தனர். அதன் விபரம்: வீசானம் ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வீசானம், கடக்கால்புதூர், ஒட்டக்குளம்புதூர், கிழக்கு சாலை உள்ளிட்ட பகுதியில் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 2 மாதத்துக்கு முன் 10 நாளைக்கு ஒரு முறை வீடுகளுக்கு தண்ணீர் வந்தது. தற்போது ஒரு மாதமாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் ஒரு குடம் தண்ணீரை ₹7 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. கூலி வேலை செய்து வரும் ஏழை மக்கள், பல கிமீ தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். எனவே வீசானம் ஊராட்சியில் தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : pitcher ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனுர்...