×

கொல்லிமலையில் மருந்தகம் திறப்பு விழா

சேந்தமங்கலம், அக்.30: கொல்லிமலையில், மலைவாழ் மக்களின் நலன் கருதி அம்மா மருந்தகம் அமைக்க வேண்டும் என சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று கூட்டுறவு துறை சார்பில், செம்மேட்டில் புதிய மருந்தகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நாமக்கல் ஆர்டிஓ கிராந்திகுமார்பதி, புதிய அம்மா மருந்தகத்தை திறந்து வைத்தார். இதில் எம்எல்ஏ சந்திரசேகரன் பேசுகையில், ‘கொல்லிமலையில் மலை வாழ்மக்கள் நலன் கருதி, அமைக்கப்பட்டுள்ள இந்த மருந்தகத்தில், மலிவு விலையில் மருந்துகள் வாங்கி பயனடையலாம்,’ என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரன், தாசில்தார் செல்வராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள், சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Opening ceremony ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா