×

தேனி, கம்பம், போடியில் சொத்துவரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி, அக். 30: சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி,  கம்பம், போடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், அலுவலங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலை, குடியிருப்புகளுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பெயர் மாற்றுக்கட்டணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பாக  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் சடையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரசுப்பு,

மாவட்டக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் லாசர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் சின்னராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நகர செயலாளர் நாகராஜன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயா, ஜெயராஜ், லெனின் பேசினர். நிகழ்ச்சியில் ஏரியாக்குழு ஜீவா, அய்யப்பன், கருப்பசாமி, ஜெயன், அக்பர், முத்துப்பிள்ளை மற்றும் நகர் கிளை  செயலாளர்கள் கலந்து கொண்டனர். போடி நகராட்சி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜப்பன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,CPI (M) ,Theni ,Powai ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...