×

திருக்கோவிலூர் பேரூராட்சியில் காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்குகள்

திருக்கோவிலூர், அக். 30: திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்குமுனை சந்திப்பு, ஐந்துமுனை சந்திப்பு, பஸ்நிலையம், கட்டகோபுர சந்திப்பு, ஏரிக்கரைமூலை, சங்கராபுரம் சாலை சந்திப்பு, புறவழிச்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பேரூராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்குகள் பழுதடைந்து சுமார் ஒரு மாதம் அகியும் இன்னும் சீரமைக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் அடங்கிய பிரதான சாலைகளில் உள்ள இப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இங்கு தொடர்ந்து இருள்சூழ்ந்தே காணப்படுவதால் விபத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதோடு வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் அதிகாலை நேரங்களில் இப்பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இருக்காது என்று பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் தினம், தினம் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துதிருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Himalayan ,Tirukovilur Panchayat ,
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்