×

உடன்குடியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உடன்குடி,அக்.30: தமிழக அரசின் சொத்து வரி, குடிநீர்கட்டணம், பிறப்பு, இறப்புசான்றிதழ் கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடந்த கோரியும் அனைத்துக்கட்சிகள் சார்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய நலச்சங்க தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஆசாத், நகர திமுக செயலாளர் ஜாண்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நலன்காக்கும் இயக்கநிறுவனர் முகைதீன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
இதில் நகர திமுக அவைத்தலைவர் திரவியம், ஒன்றிய திமுக பிரதிநிதி சலீம், முன்னாள் கவுன்சிலர் மகபூப், நகர விசிக தலைவர் தௌவ்பிக், நகர கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆதிநாராயணன், காங்., சிவலூர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு ஆர்பாட்டம் குறித்து விளக்கி பேசினர்.

Tags : parties ,Udangudi ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...