×

காயல்பட்டினத்தில் பிஎஸ்என்எல் அதிவேக இன்டர்நெட் சேவை துவக்கவிழா

ஆறுமுகநேரி, அக்.30: காயல்பட்டினத்தில் பிஎஸ்என்எல் சார்பில் அதிவேக இன்டர்நெட் சேவை துவக்க விழா நடந்தது.  பிஎஸ்என்எல், கேபிள் டி.வி. நிறுவனம், பைலட் பைபர்நெட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அதிவேக இன்டெர்நெட் மற்றும் டெலிபோன் பேசும் வசதியை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக காயல்பட்டினத்தில் அறிமுகம் செய்யப்பட்டு துவக்க விழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட தொலைதொடர்பு பொது மேலாளர் சஜிகுமார் தலைமை வகித்து சேவையை துவக்கி வைத்தார். துணை பொது மேலாளர்கள் சேவியர், சிவசைலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  துணை மேலாளர் சேவியர் லூர்துசாமி வரவேற்றார்.  விழாவில் துணை பொது மேலாளர் கதிர்வேல், காயல்பட்டினம் உதவி பொறியாளர் மணிகண்டன், துணை கோட்ட பொறியாளர்கள் எஸ்கலின், பைலட் பைபர்நெட் நிறுவன பொறுப்பாளர் ஹபீப், டிசிடபிள்யூ நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி பினோ உட்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல பொறியாளர் பிரவின் நன்றி கூறினார்.

Tags : BSNL ,Internet service launch ,Kayalpattinam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...