×

திருச்செந்தூரில் மனநலம் விழிப்புணர்வு பேரணி

திருச்செந்தூர், அக். 30: திருச்செந்தூர் அரசு மருத்துவமனை சார்பில் மன நலம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.  திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, மாவட்ட மன நல மையம் மற்றும் செவிலியர் கல்லூரி ஆகியன இணைந்து மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பொன்ரவி தலைமை வகித்து, பேரணியை  தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் பாபநாசகுமார், சுந்தரேஸ்வரன், சசிகலா, அரவிந்த், சண்முகநாதன், மாவட்ட மன நல மைய மருத்துவ அலுவலர் சுவாதிலட்சுமி, செவிலியர் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, பேராசிரியைகள் பெண்ணரசி, ரூபி முன்னிலை வகித்தனர். இதில் செவிலியர் கல்லூரி மாணவிகள் மன நலம் குறித்த பதாகைகளை கைக ளில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் காமராசர் சாலை, 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து அரசு மருத்துவமனையில் நிறைவு செய்தனர். தொடர்ந்து செவிலியர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மன நலம் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இளைய சமுதாயமும், மனநலமும் என்ற தலைப் பில் நடந்த கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags : Mental health awareness rally ,Tiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...