பாபநாசம், அக். 26: பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் கவுரவ தலைவர் கந்த சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் துரைசாமி வரவேற்றார். வரவு செலவு கணக்குகளை வாசித்து பொருளாளர் சண்முகம் ஒப்புதல் பெற்றார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். நீட் தேர்வு, டெட் தேர்வுகளை கைவிட வேண்டும். விவசாயம் பாதிக்காமல் இருக்க மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.