கோவை, அக்.26: தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் இன்று கோவை வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ெஜயராமன் மகள் திருமண வரவேற்பு விழாவில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.
விழாவில் பங்கேற்ற பின் முதல்வர் கோவை ரெட்பீல்ட் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கவுள்ளார். நாளை அவர், பீளமேடு கொடிசியா வளாகத்தில் தனியார் அமைப்பு துவக்க விழாவில் பங்கேற்கவுள்ளார். இதை தொடர்ந்து முதல்வர், உக்கடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளத்தை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.