×

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் காத்திருப்பு போராட்டம் சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது

திருவாரூர், அக். 26:   வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
  வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியாக ஓய்வு பெறும் நாளில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர்களுக்கு ரூ 3 லட்சம் வழங்கிட வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மாநிலத்தை உயர்த்தி வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் குமார்,  செயலாளர் ராஜசேகர் மற்றும் 200 பெண்கள் உட்பட மொத்தம் 250 பேர்களை தாலுகா போலீசார் கைது செய்து காட்டூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

Tags : waiter ,Tiruvarur ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...