×

வீடு புகுந்து கர்ப்பிணியிடம் செயின் பறிப்பு

புளியங்குடி, அக். 26:  புளியங்குடி டி.என்.புதுக்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகள் இசக்கியம்மாள் (27). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இசக்கியம்மாள் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்திற்காக அவர் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர், வீட்டில் புகுந்து இசக்கியம்மாள் அணிந்திருந்த 20 கிராம் செயினை பறித்து சென்றான். இதுகுறித்து மாடசாமி அளித்த புகாரின்பேரில் எஸ்ஐ அந்தோணிராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது