×

குளங்களை காவல்காக்கும் பொதுப்பணித்துறை வின்ஸ் ஆன்றோ: நான்கு வழி சாலை பணிகளுக்காக

குளங்களை காவல்காக்கும் பொதுப்பணித்துறை
வின்ஸ் ஆன்றோ: நான்கு வழி சாலை பணிகளுக்காக குளங்கள் மண் நிரப்பி மூடப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தக்கலை அருகே உள்ள அரசமூட்டு குளத்தில் மண் கொட்டப்படுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்தனர். அதன் பின்னர் மண் கொட்டியபோது விவசாயிகள் சென்று தடுத்தனர். இப்போது குளத்தில் மண் கொட்டாமல் இருப்பதை கண்காணிக்க பொதுப்பணித்துறை ஒரு இரவு காவலரை அங்கு குளக்கரையில் கண்காணிப்பு பணிக்கு நியமனம் செய்துள்ளது. எந்த அளவுக்கு விதிமீறல் நடைபெறுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.லால்மோகன்: 76 குளங்களில் 34 குளங்களில்தான் பாலம் கட்டப்படுகிறது. இதர குளங்களை மண் நிரப்பி மூடுகின்றனர். குளங்களில் பாலங்கள் கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவில்லை. அவ்வாறு தயாரிக்கமாலேயே பணிகளை மேற்கொள்கின்றனர். இதில் பசுமை தீர்ப்பாய உத்தரவு மீறப்படுகிறது.கலெக்டர்: விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில்தான் பணிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Tags : Vans Ongo ,Pavilions Pavilions ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...