×

எர்ணாபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்றவர் சிக்கினார்

நாமக்கல், அக்.25:  நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற ஆசாமி சிக்கினார்.
நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தை சேர்ந்த முத்துசாமி, நேற்று காலை குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பிற்பகல் 3 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆசாமி வெளியே ஓடிவந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து அந்த ஆசாமியை பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். தகவல் அறிந்த நல்லிப்பாளையம் போலீசார், அங்கு சென்று ஆசாமியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவரது பெயர் பாண்டியன்(33), மதுரையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. நல்லிபாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் திருட வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,Ernakulam ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்