×

பசுபதிபாளையம் அருகே கிருஷ்ணாநகர் பகுதியில் சாக்கடைவடிகால் வசதி

கரூர், அக். 25: கரூர் பசுபதிபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்   என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் ராமானுர் பகுதியில் இருந்து இபி காலனி மற்றும் காந்திகிராமம் செல்லும் சாலையில் கிருஷ்ணா நகர் உள்ளது. சாலையோரம் உள்ள இந்த நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.ஆனால், இந்த நகரைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு தெருக்களில் சாக்கடை வடிகால் வசதி மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கிருஷ்ணா நகர் பகுதிக்கு சாக்கடை வடிகால் வசதி கொண்டு வரப்படாமலேயே உள்ளன.
சாக்கடை வசதியில்லாத காரணத்தினால், வீடுகளில் இருந்து அனைத்து கழிவுகளும் வெளியேற்ற வழியின்றி இந்த பகுதியினர் தவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இது குறித்து இப் பகுதியினர் கூறுகையில், நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதி முழுதும் அங்கீகாரம் பெற்ற பகுதியாகும். ஆனால், அங்கீகாரம் இருந்தும், அடிப்படை வசதிகளான சாக்கடை வடிகால், பாதாள சாக்கடை திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. ஆனால், நகராட்சிக்கு தேவையான அனைத்து வரிகளும் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியினர் அனைவரும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பணமும் கட்டியுள்ளனர். ஆனால், திட்டம்தான் இதுநாள் வரை வரவில்லை. நகராட்சி உட்பட அனைத்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் செய்து தரப்படவில்லை என்றனர். எனவே, கிருஷ்ணா நகர்ப்பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைத்து தருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Krishnanagar ,Pasuppathipalayam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி