×

டூவீலரில் சென்ற வாலிபர் பலி

விருதுநகர், அக்.25: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார். விருதுநகர் அருகே உள்ள வீரசெல்லையாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன்(34).  வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர் தற்போது ஊருக்கு வந்திருந்தார். இவர் நேற்று விருதுநகர் வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீரசெல்லையாபுரத்திற்கு சென்றபோது, விருதுநகர்-சிவகாசி ரோட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் குணசேகரன் படுகாயமடைந்து  சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : youngster ,tweeter ,
× RELATED திருவண்ணாமலையில் கோலாகலமாக...