×

திருவேங்கடம் அருகே மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவேங்கடம், அக். 25:  திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பிர்காவை சேர்ந்த கே.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் கே.ஆலங்குளம் மற்றும் நாலந்துலா ஆகிய கிராம மக்கள் கலந்துகொண்டனர். நெல்லை சப்-கலெக்டர் மனீஷ் நாராயணரே தலைமை வகித்தார். திருவேங்கடம் தாசில்தார் லட்சுமி வரவேற்றார். தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி, மண்டல துணை தாசில்தார் புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இதில், ஊனமுற்றோர் உதவித்தொகை ஒருவருக்கும், முதியோர் உதவித்தொகை 6 பேருக்கும், உழவர் அட்டை 20 பேருக்கும், பட்டா 3 நபர்களுக்கும், முதல்வர் பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலை ஒருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மகேந்திரவாடி கிராமத்தில் 93 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விழாவில் மாவட்ட தனித்துணை கலெக்டர் மாறன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவேங்கடம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலைச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கோமதி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : camping camp ,Thirumangalam ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...