தென்காசி, அக். 25: வடகரை ஜாய் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சாலமோன் தலைமை வகித்தார். முதல்வர் செல்வமூர்த்தி, நர்சரி பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை பாப்பா வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். விழாவில் கேஜி வகுப்பு மாணவ, மாணவிகள் பலவண்ண மலர்களை ஏந்தி பள்ளி வளாகத்தை சுற்றி வலம் வந்தனர். இன்றைய சூழ்நிலையில் இயற்கை காட்சி, இயற்கை மலர்கள் என்பது மிக அரிதான ஒன்றாகி விட்டது. அரியவகை மலர்கள் எல்லாம் இந்த மலர்கள் தினத்தில் இடம்பெற்றிருந்தது. மலர்கள் குறித்த பாடல்கள் பாடப்பட்டது. ஏற்பாடுகளை மழலையர் வகுப்பு ஆசிரியைகள் செய்திருந்தனர்.