×

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் ஆங்கில இலக்கணம் இலவச பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி,அக்.25: தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் ஆங்கில இலக்கணம் குறித்த இலவச  வகுப்புகள் துவங்குகின்றன.ஏழை, எளிய மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தூத்துக்குடி கின்ஸ் அகாடமி நடத்தி வருகிறது. தொடர்ந்து இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் போட்டித்தேர்வு வெற்றிகள் சிறப்பானதாக அமைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த தமிழகஅரசின் சீருடை பணியாளர்கள் தேர்வில் கின்ஸ் அகாடமியில் பயின்ற ஒரு மாணவி உட்பட 28 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது ரயில்வே பாதுகாப்பு படைக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. இவை தவிர தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவ மாணவியருக்கு மாலை நேர டியூசன் வகுப்புகளும் நடந்து வருகிறது.

தற்போது ஆசிரியர் பயிற்சி தேர்வு, வனத்துறை ரேஞ்சர் பதவிக்கான தேர்வு மற்றும் மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஆங்கில இலக்கண வகுப்புகள் கின்ஸ் அகாடமியில் இலவசமாக துவங்கியது. இதில்  70 மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். துவக்க நிகழ்ச்சியில்  கின்ஸ் அகாடமி இயக்குநர் பேச்சிமுத்து, ஆங்கில பயிற்றுனர்கள் நாகராஜன், திவ்யா ஆகியோர் ஆங்கில இலக்கண வகுப்புகளை நடத்தினர். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thoothukudi Gins Academy ,
× RELATED தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் இலவச தேர்வுகளுக்கு முன்பதிவு