×

லோக் அதாலத் ரூ.77 லட்சம் பைசல்

சென்னை: சாலை விபத்து வழக்குகளுக்காக நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் ரூ.77 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. சாலை விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் இழப்பீடு கோரி தொடர்ந்து நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிப்பதற்காக லோக் அதாலத் ஒன்றை சென்னை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் நீதிபதி ஜெயந்தி ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி லோக் அதாலத் நேற்று சட்ட பணிகள் ஆணையத்தில் நடைபெற்றது.

வழக்கு விசாரணைக்காக பலர் வந்திருந்தனர். அதில், 90 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மேலும், இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதில், 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் 77 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

Tags : Lok Adalat ,Faisal ,
× RELATED சிவகாசியில் லோக் அதாலத் மூலம் 694 வழக்குகளுக்கு தீர்வு