×

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

சேலம், அக்.23: சேலம் தாதகாப்பட்டியில் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அமானிகொண்டலாம்பட்டி காட்டூர் காந்திநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (39). இவர் நேற்று முன்தினம், சேலம் தாதகாப்பட்டி காளியம்மன்கோயில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை,3 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இதை பார்த்து மக்கள் திரண்டதால், 3 பேரும் தப்பியோடினர்.
இது பற்றி அன்னதானப்பட்டி போலீசில் செல்வராஜ் புகார் அளித்தார். எஸ்ஐ பாலசுப்பிரமணியம் விசாரணை நடத்தியதில், வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது, அமானிகொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (35), மூணாங்கரட்டை சேர்ந்த கவுதம், வெள்ளையன், மணிகண்டன் என்பது  தெரியவந்தது. இதில், அர்ஜூனனை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : Detainee ,
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...