×

வையம்பட்டி அருகே தடுப்புகட்டையில் பைக் மோதி காயமடைந்த வாலிபர் பலி

மணப்பாறை, அக்.23:  வையம்பட்டி அருகே தடுப்பு கட்டையில் பைக் மோதியதில் காயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். அரியலூரைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (21). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் தனியாக கேரளாவிற்குச் சென்றுவிட்டு  நேற்றுமுன்தினம் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வையம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டியில் உள்ள மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்மீது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் சங்கரநாராயணன் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் விரைந்து வந்து சங்கரநாராயணனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கரநாராயணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : youngster ,detention area ,Vayampatti ,
× RELATED நவம்பர் முதல் தேதி பள்ளிகள் திறப்பு,...