திருத்துறைப்பூண்டி, அக். 23: திருத்துறைப்பூண்டியில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது.
அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தர் தலைமை வகித்தார். வக்கீல் பத்மநாபன், நகர அவைத்தலைவர் குணாளன், நகர துணைச்செயலாளர் ஜான்பாட்ஷா, நகர பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு வரவேற்றார்,பேச்சாளர் வெங்கடேசன் பேசினார். இதில் முன்னாள் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வக்கீல்கள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கிருத்திகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.