×

காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 29ம் தேதி பேரணி

திருவாரூர், அக். 23: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன், துணை செயலாளர் வைத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது  உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி திருவாரூரில் பேரணி நடத்தி அதன் முடிவில் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு அளிப்பது மற்றும் அடுத்த மாதம் 13,14 மற்றும் 15 தேதிகளில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Anganwadi Employees Union ,ASEAN ,
× RELATED உலக அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான்...