×

குடிபோதையில் ரகளை

விருதுநகர், அக். 23: விருதுநகரில் உள்ள தெற்கு ரத வீதியில், வடமாநிலத்தை சேர்ந்தவர் பாணிபூரி கடை வைத்துள்ளார். நேற்று  முன்தினம் கடைக்கு குடிபோதையில் வந்த இருவர், தகராறு செய்தனர். கடையில் இருந்த பாணிபூரியை தரையில் கொட்டினர். அதை தடுக்க முயன்றவர்களை கல்லால் எறிந்து அச்சுறுத்தினர்.
   பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பியோடினர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த பஜார் காவல்நிலைய சிறப்பு பிரிவு போலீஸ்காரர் ஆனந்த், அவர்களை துரத்திச் சென்று, பொதுமக்கள் உதவியுடன் ஒருவரை பிடித்தார். மற்றொருவர் தப்பினார்.
பிடிபட்டவரை பஜார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர், ‘விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த அருள் (19) என தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் தப்பிய ஓடியவரை தேடி வருகின்றனர்.

Tags : races ,
× RELATED ஏரியூரில் மாட்டுவண்டி பந்தயம்