போடி அக் 23: போடி அருகே சின்னமனூர் சாலையிலுள்ள டி.சிந்தலைச்சேரியை சேர்ந்தவர் ரத்தினராஜ் மனைவி சலேத் சித்ரா (25). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. போடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சலேத் சித்ரா அனுப்பி வைக்கப்பட்டார்.
போ.நாகலாபுரம் விலக்கு அருகே வந்த போது ஆம்புலன்சிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் தேனி மாவட்ட க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.