×

கயத்தாறு அருகே வீட்டை உடைத்து பணம் கொள்ளை

கயத்தாறு,அக்.23: கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.கயத்தாறு அருகே பன்னீர்குளம் மேல கூட்டுப்பண்ணையில் வசித்து வருபவர் பரமசிவம் மனைவி சாவித்திரி (50). இவரது கணவர் பரமசிவன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் பெருமாள் கோவையில் வேலை பார்த்து வருகிறார்.
 இதனால் சாவித்திரி தனியாக வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் அருகிலுள்ள தோட்டத்தில் பூ பறித்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.  அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த சாவித்திரி வீட்டிற்குள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 3ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,Kayattur ,
× RELATED பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல்...