×

அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மூலிகை கண்காட்சி

நாகை,அக்.23: நாகை மாவட்டம்  அப்துல்கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அப்துல்கலாம் 87வது பிறந்த நாளை முன்னிட்டு நாகூர் மார்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்  மூலிகை கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேந்தர்மதி வரவேற்றார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரன், டிஎஸ்பி பத்திரிநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் வினாடி, வினா போட்டிகள் நடைபெற்றது. மூலிகை கண்காட்சியும் நடைபெற்றது.

Tags : Exhibition ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!