×

கீழ்பகுதி கிராம மக்கள் கோரிக்கை செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

கரூர், அக். 23: கரூர் நகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் துவக்கப்பள்ளியை சுற்றிலும் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் ஒத்தையூர் சாலையில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இதில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் பக்கவாட்டு பகுதியை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் விஷ ஐந்துகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளதால் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

பள்ளியின் முன்புறம் போதுமான பாதுகாப்பு இருந்தாலும் பக்கவாட்டு பகுதி திறந்த நிலையில், முட்புதர்கள் அடர்ந்துள்ளதால் பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த பள்ளியை சுற்றிலும் ஒரே அளவில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்பது அனைத்து தரப்பினர்களும் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Government School ,Chellandipalayam ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா