×

தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள் பாதிப்பு கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், அக். 23:  வேடசந்தூர் கோவிலூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் பாலுபாரதி மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், குஜிலியம்பாறை சின்னக்குளம் வரத்து வாய்க்கால் பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் விளைநிலங்களின் தன்மையும் மாறும் நிலை உள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக வேதியியல் பொருட்கள் இருப்பு வைக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’‘ என்றனர்.

Tags : Petitioners ,
× RELATED அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்