×

மணல், பாறாங்கல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

குளச்சல், அக் .23: மதுரை மண்டல கனிம வள அதிகாரி ஸ்ரீதர் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று குமரி மாவட்டத்தில் தீவிர ரோந்து சென்றார். மண்டைக்காடு பகுதியில் செல்லும் போது கூட்டுமங்கலம் பாலம் அருகில் பாறாங்கற்களை ஏற்றி சென்ற ஒரு டிப்பர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது பாறாங்கற்கள் எடுக்கும் அனுமதி காலவதி முடிந்து 15 நாட்கள் ஆகி, புதிதாக அனுமதி பெறாமல் கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் டிப்பர் லாறியை பறிமுதல் செய்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுபோல் மண்டைக்காடு கோயில் முன்பு செல்லும் போது கூட்டுமங்கலத்திலிருந்து கோயிலான்விளைக்கு சென்று கொண்டிருந்த ஒரு டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி எம்சாண்ட் கொண்டு சென்றது தெரிய வந்தது. அந்த டெம்போ பறிமுதல் செய்யப்பட்டு, மண்டைக்காடு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பபட்டது.

Tags :
× RELATED சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு