பாவூர்சத்திரம், அக். 18: தென்காசி கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் சுரண்டை, சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். பாaவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி ஜாக்குலின் பிரபா மற்றும் 4ம் வகுப்பு மாணவர் ரோஹித் விஷால் ஆகிய இருவரும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற இருவரையும் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அந்தோணி சேவியர், முதல்வர் முத்துலட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.