×

நில சீட்டு கட்டியவர்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

சிவகாசி, அக். 18: நில சீட்டு கட்டி ஏமாற்றமடைந்தவர்கள் சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தனர். சிவகாசி  கிழக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட மல்லிகை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி.  இவர் தவனை முறையில் பணம் வாங்கி நிலம் பதிந்து கொடுத்து வருகிறார்.  இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நில சீட்டு கட்டி வந்துள்ளனர்.  20 மாதங்கள் கட்டி முடித்துவிட்ட நிலையில், பணம் வாங்கிய சுப்பிரமணி திடீரென  மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றமடைந்தவர்கள்  விருதுநகர் எஸ்பி அலுவலகம், திருத்தங்கல் காவல் நிலையம் என புகார் கொடுக்க  அலைந்துள்ளனர். புகாரை எந்த அலுவலகத்திலும் வாங்காததால் சிவகாசி டிஎஸ்பி  அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். மேலும் பணத்தை மீட்டு தரும்படி கோரிக்கை  மனுவை கொடுத்தனர்.

Tags : Landlords ,DSP ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...