×

டூவீலர் விபத்தில் 5 பேர் படுகாயம்

ராஜபாளையம், அக். 17:  ராஜபாளையம் அருகே உள்ள அயனாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜூ (29). இவர், தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் அர்ஜூனன், ஜெயலட்சுமி ஆகியோருடன் ஆர்.ரெட்டியபட்டி பகுதியில் நேற்று முன்தினம் காலை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் ராஜூ, விஜயலட்சுமி, அர்ஜூனன், ஜெயலட்சுமி மற்றும் டூவீலரை ஓட்டி வந்த பழைய செந்நெல்குளத்தை சேர்ந்த கணேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். விஜயலட்சுமி, அர்ஜூனன், ஜெயலட்சுமி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையிலும் ராஜூ, கணேசன் ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜூ அளித்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : tuweiler crash ,
× RELATED டூவீலர் விபத்தில் வாலிபர் பலி