×

நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை

காரைக்குடி, அக். 17: காரைக்குடி அருகே கோவிலூர் மடத்தின் 12 குருமாக சன்னிதானமாக இருந்த நாச்சியப்ப சுவாமிகளின் 7வது குருபூஜை விழாவையொட்டி கருத்தரங்கு நடந்தது. கோவிலூர் ஆதீனம் சீர்வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் தலைமை வகித்தார். குழந்தை கவிஞர் செல்ல கணபதி, திருக்குறள் பேரவை தலைவர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த நிறுவனர் நாள் விழாவில் மாணிக்கவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் மீனாட்சிசோமசுந்தரம், பதிப்பக மேலாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். குருபூஜையையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை