×

கஸ்டமராக இருந்து புரோக்கராக மாறினேன் கைதான ஒடிசா வாலிபர் வாக்குமூலம் வங்கதேச சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு

வேலூர், அக்.17: வேலூரில் வங்கதேச சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கைதான வங்கதேச வாலிபர், முதலில் தான் கஸ்டமராக இருந்து பின்னர் புரோக்கராக மாறியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். வங்கதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா(30). இவர் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை வேலூருக்கு அழைத்து வந்து, லாட்ஜில் தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் முஸ்கானாவை கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் ரெய்சிகாந்த்நாயக்(29) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். கைதான புரோக்கர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

கைதான ரெய்சிகாந்த்நாயக் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் திருப்பூரில் உள்ள கார்மென்ட்சில் வேலை செய்து வந்துள்ளார். அதே கார்மென்ட்சில் வங்கதேச விபச்சார பெண் முஸ்கானாவும் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது முஸ்கானாவின் ரெகுலர் கஸ்டமராக ரெய்சிகாந்த்நாயக் இருந்துள்ளார்.பின்னர் நாளடைவில் முஸ்கானாவுடன் சேர்ந்து திருப்பூர், சித்தூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் லாட்ஜ்களில் அறை எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கிய புரோக்கராகவும் ரெய்சிகாந்த் நாயக் செயல்பட்டுள்ளார். மேலும் கொல்கத்தா புரோக்கர்கள் 7 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து புரோக்கர்கள் 7 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : teenager ,Odisha ,Bangladeshi ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை