×

மாநில கேரம் போட்டிக்கு நாமக்கல் மாணவர்கள் தேர்வு

குமாரபாளையம், அக்.16: திருவாரூரில் 18ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான கேரம் போட்டிக்கு நாமக்கல் கேரம் கழகத்தை சேர்ந்த 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட கேரம் கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான கேரம் தேர்வு போட்டி குமாரபாளையம் ஜேகேகே நடராஜா உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 100 அணிகள் பங்கேற்று விளையாடினர். மாவட்ட கேரம் கழக தலைவர் ஓம்சரவணா போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் 8 மாணவர்கள் 8 மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 18ம்தேதி திருவாரூரில் நடைபெறும் மாநில அளவிலான கேரம் போட்டியில் விளையாட உள்ளனர். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கேரம் கழக செயலாளர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Namakkal ,state ,Caram ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!