×

புற்றுநோய் கண்டறியும் முகாம்

திருவையாறு, அக். 16: திருவையாறு அடுத்த புதுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகளிர்களுக்கான மார்பக பரிசோதனை மற்றும் ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறியும் இலவச முகாம் நடந்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் சத்தியபாமா தலைமை வகித்தார். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்க தலைவர் மருதுதுரை, செயலாளர் அரவிந்தன், பொருளாளர் கார்த்திகேயன், பேராசிரியர் பிரேமலதா, உதவி பேராசிரியர்கள் முத்துவிநாயகம், மருத்துவர் வானதி வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக பரிசோதனை மற்றும் ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

Tags : Cancer Detective Camp ,
× RELATED அரசு பள்ளி தொடர்ந்து 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி