×

பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக். 16:  நிலமற்ற விவசாய கூலிகளுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சமத்துவப்படை கட்சி சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவனத்தலைவர் சிவசாமி ஐஏஎஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். பொதுச்செயலாளர் மோகன்ராஜ் துவக்க உரையாற்றினார். மாசிலாமணி வரவேற்றார். நிர்வாகிகள் கோவிந்தசாமி, மகாராஜன், ஹரிகிருஷ்ணன், சத்ரபதி, சங்கர், குமார், உத்திரகுமார், ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Panchami Land ,
× RELATED முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல...