×

இண்டூர் அருகே விவசாயி குத்திக்கொலை

தர்மபுரி, அக்.12: தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே வழித்தட பிரச்னையில் விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே கூலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(53). விவசாயி. இவரது மனைவி முத்து. அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (60).விவசாயி. இருவரது நிலமும் அருகருகே உள்ளது. கிருஷ்ணன் தனது விவசாய நிலத்திற்கு, துரைசாமி நிலம் வழியாக செல்ல வேண்டும். இதற்கு துரைசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம், கிருஷ்ணன் தனது மனைவியுடன் தனது விவசாய நிலத்திற்கு, துரைசாமி நிலம் வழியாக சென்றார். இதற்கு கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததார். இதனால்  துரைசாமி அருகே இருந்த மூங்கில் பிரம்பால் கிருஷ்ணனை அடித்தார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துரைசாமியை வயிற்றில் குத்திவிட்டு, தப்பி ஓடினார். படுகாயமடைந்த துரைசாமி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சாய்ந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் துரைசாமியை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே, துரைசாமி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தலைமறைவான கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர். விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Indore ,
× RELATED சூதாடிய 11 பேர் கைது 6 டூவீலர்கள் பறிமுதல்