உடன்குடி, அக்.11: உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் மின்னணு கருவிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்முறைப்பயிற்சி முகாம் நடந்தது. சென்னை நிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவன மேலாளர் செந்தில் தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் அந்நிறுவன பணியாளர்கள் மாணவர்களுக்கு மின்னணு கருவிகள் குறித்த செய்முறை விளக்கமளித்தனர். இதில் 10,11,12ம் வகுப்புகளைச் சேர்ந்த 60மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்குதல், புத்தாக்கம் ஆகியவை குறித்தும் கலந்துரையாடல் நடந்தது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ரவி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் பள்ளித்தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜீவானந்தம், செ யலர் சுப்பையா, பொருளாளர் செல்வம், ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், சுயம்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.