×

வள்ளியூர், ஏர்வாடியில் துணிகரம் பள்ளி, வீட்டை உடைத்து கொள்ளை

வள்ளியூர், அக். 11:  வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. ஏர்வாடியை சேர்ந்த பொன்தாமஸ் என்பவர் பள்ளியை நடத்தி  வருகிறார். இவர், தினமும் காலை பள்ளிக்கு வந்துவிட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். பள்ளியின் வெளியே காவல் பணிக்கு காவலாளி உள்ளார். நேற்று காலையில் பள்ளி உரிமையாளர் பொன்தாமஸ் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி உள்ளே சென்ற போது அங்குள்ள கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஏர்வாடி:  ஏர்வாடி அருகே கீழ கட்டளையை சேர்ந்தவர் பாலன்(45). நேற்று இவரும், குடும்பத்தினரும் வயலில் நெல் அறுவடைக்காக சென்றிருந்தனர். வயலில் அறுவடை முடித்து வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பாலன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ இம்மானுவேல் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Valliyur ,school ,Verma ,Airwatta ,house break ,
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது