×

பக்தர்கள் ஆர்ப்பாட்டம் மக்கள் குறைதீர் கூட்டம் சுரக்ஷா விபத்து காப்பீட்டு திட்டத்தில் ரூ.10லட்சம் காசோலை வழங்கல்

திருச்சி, அக்.11: திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் சுரக்ஷா விபத்து காப்பீட்டு திட்டத்தின் விபத்து காப்பீட்டு திட்டம் உள்ளது. ஐஓபியின் கிளை நிறுவனமான யுனிவா–்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் இணைந்து வழங்கும் விபத்து காப்பீட்டு திட்டமாகும். காப்பீட்டு தொகை ரூ. 10 லட்சம், இதற்கான பிரீமியம் தொகை ரூ. 118 (சேவை வரி உட்பட), விபத்து இறப்பிற்கு மட்டும் இக்காப்பீடு பொருந்துக்கூடிய வகையில் உள்ளது. அனைத்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு சமூக அக்கறை கொண்ட திட்டமாகும்.  

இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் நாரண மங்கலத்தை சேர்ந்த சுரேஸ்குமார் என்பவர் சுரக்ஷா விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரீமியம் ரூ.118 செலுத்தியிருந்தார். இவர் இக்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து 27நாட்கள் ஆன நிலையில் விபத்தில் இறந்து விட்டார். அதனால் அவரின் தந்தை மணி என்பவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார்.  நிகழ்ச்சியில், டிஆர்ஓ சாந்தி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நடராஜ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Suraksha ,
× RELATED அசாமில் கன சுரக்‌ஷா கட்சி எம்.பி. நபா...