×

மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் மாணவன் போக்சோவில் கைது

தேனி, அக். 11: தேனியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி அல்லிநகரம் கக்கன்ஜி காலனியை சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு டுட்டோரியலில் 10ம் வகுப்பு படிக்கும் அதே ஊரை சேர்ந்த 15 வயது மாணவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.  
 இதுகுறித்து மாணவியின் தாய், அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார், சம்பந்தப்பட்ட மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். நேற்று மாணவியின் உறவினர்கள், பழங்குடியின குறவர் அமைப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘‘மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அல்லிநகரம் போலீசில் புகார் கொடுக்க  சென்றோம். அப்போது இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, அநாகரீகமாக பேசினார். எனவே அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

Tags : student ,torcher student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...