சாத்தான்குளம், அக். 11: சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டி நடந்தது. போட்டிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணை தலைமை ஆசிரியர் கனகா முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை பார்வதி வரவேற்றார். போட்டிகளை சாத்தான்குளம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வெர்ஜின் அன்பரசி, பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மரியசேவியர் வில்சன், சாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் நடத்தினர்.
இதில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும், போட்டியை நடத்திய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார்.