×

ராசிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்

ராசிபுரம், அக்.10: ராசிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ராசிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி விஜயராகவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ராசிபுரம் பகுதியில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, டிஎஸ்பி விஜயராகவன் பேசினார்.
 மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக, கால்வாய் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இதற்கு எந்த உதவி வேண்டுமானாலும் காவல் துறை செய்து கொடுக்கும் என்றார். பின்னர் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள், மின்வாரியத்தினர், தீயணைப்பு துறையினர், சுகாதாரத் துறையினரிடம் ஆலோசித்து, செயல்பட வேண்டிய அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Disaster management consultation meeting ,office ,Rasipuram DSP ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...