கிருஷ்ணகிரி, அக்.10: கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக முருகேசன் ஓரிரு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார். மாவட்டம் முழுவதும் ஒரே பொறுப்பாளர் நியமிப்பதால் கட்சிப்பணிகளை விரைந்து முடிக்கவில்லை எனவும், கிழக்கு, மேற்கு என இருமாவட்டங்களாக பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என கட்சி தொண்டர்கள், தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர். நேற்று முன்தினம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிப்பவதாகவும், அதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக சீனிவாசனை நியமித்துள்ளதாகவும் அறிவித்தார். மேலும் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முருகேசன் நீடிப்பார் என்றும் தெரிவித்திருந்தார். ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.