×

அரசு பஸ் டயர் வெடித்து மூதாட்டி படுகாயம்

திருச்சி, அக்.10: பெங்களூரைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி(60). இவர் ரங்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் வந்தார். இந்நிலையில் நேற்று திருச்சி பெரியகடைவீதியில் பொருட்கள் வாங்க தெப்பகுளம் வருவதற்கு ரங்கத்திலிருந்து அரசுடவுன் பஸ்சில் ஏறினார். பஸ் சத்திரம் பஸ்நிலையம் அருகில் வந்தபோது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டயருக்கு மேலே இருந்த பலகை உடைந்து சிதறி பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதன் வழியே யாரும் விழவில்லை. ஆனால் பஸ்சில் டயர் இருந்த இடத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ராஜலெட்சுமிக்கு உடைந்து சிதறிய பலகையால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனடியா பஸ்சில் உடன் பயனித்த பயணிகள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இன்று அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் பொருத்தப்பட உள்ளது. இச்சம்பவத்தால் அரசு பஸ்சில் பயணிக்க பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Government bus tire ,
× RELATED மாஞ்சோலையில் அரசு பஸ் டயர் வெடித்து விபத்து